Skip to main content

Posts

Showing posts from July, 2023

தேனி அருகே மதுரை மக்கள் தொடர்பகத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், கோவிந்தநகரம் கிராமத்தில் இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மதுரை மக்கள் தொடர்பகத்தின் சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானிய ஆண்டு, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும், உலக மக்கள் தொகை தினம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய விழிப்புணர்வு முகாம் 25.7.2023 அன்று நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நவநீதன் தலைமை தாங்கினார். முகாமிற்கு வந்த அனைவரையும் மதுரை கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர் வரவேற்றார். இந்த முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவி திட்டங்கள், வேளாண்மை சார்ந்த திட்டங்கள், விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள், கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தால் வழங்கப்படும் இலவச பயிற்சிகள்  என பல்வேறு அரசு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் ஜெ. ரூபன் சங்கர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிருக்கு மத்திய, மாநில...

இங்கிலாந்து இங்கிலீஸ் கால்வாயில் : 72 கி.மீ கடல் தூரத்தை நீந்தி சாதனை நிகழ்த்திய தேனி சிறுவன்

தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் அவர்களிடம் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18.7.2023 அதிகாலை 3 மணிக்கு டோவர் சாம்பியன் ஹோ பீச் இங்கிலாந்து (Dover Samphire Hoe Beach England) என்ற இடத்தில் இருந்து இந்திய அணியின் சார்பாக. நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர்  கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயை (English Channel) நீந்த தொடங்கினார்கள். இதில் ஆங்கில கால்வாய் (English Canal) மொத்த 36 கிலோ மீட்டர். இதுவரை இந்தியாவில் இருந்து ஒரு வழிப்பாதை அதாவது இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள். ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கிலோ மீட்ட...

தமிழகத்தில் பல குடும்பங்களின் வறுமைக்கு காரணம் டாஸ்மாக் தான் : புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு குறித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,  செந்தில் பாலாஜி மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சரான பின்பு தான் தமிழகத்தில் தனியார் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மதுபான கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒரு மதுபான கூடத்திற்கு ரூ.30  லட்சம் பெற்று இந்த தனியார் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதுபோல தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது கண்துடைப்பாக தான் தெரிகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதென்றால் அடுத்தடுத்து எப்போது கடைகள் மூடப்படும் என்று விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்க முடியுமா? தமிழகத்தில் டாஸ்மாக்கை ஒழித்தால்  குடும்பத்தில் சேமிப்பு வந்து விடும், அதுபோல பல குடும்பங்களின் வறுமைக்கு காரணம் டாஸ்மாக் தான். தற்போது டாஸ்மாக் விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ள...

தேனியில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி : மாணவர் பிரிவில் தஞ்சாவூர் பள்ளியும், மாணவியர் பிரிவில் சேலம் பள்ளியும் முதல் இடம் பிடித்தது

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி திருவிழாவை முன்னிட்டு நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி 7.7.2023 முதல் 9.7.2023 வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதற்கான இறுதிப்போட்டி 9.7.2023 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மாணவர் அணி பிரிவில் தஞ்சாவூர் கமலா சுப்பிரமணி மேல்நிலைப்பள்ளியும், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி அணிகளும் விளையாடின. இதில் தஞ்சாவூர் கமலா சுப்பிரமணி மேல்நிலைப்பள்ளி அணி 52-48 என்ற புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றது. தூத்துக்குடி கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி அணியும், திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி அணிகளும் விளையாடின. இதில் 79-56 புள்ளிகளை பெற்று தூத்துக்குடி கிராண்ட் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும், திண்டுக்கல் MSP சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி அணி நான்காம் இடத்தையும் பிடித...

தேனியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவியர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி திருவிழாவை முன்னிட்டு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி துவக்க விழா நடைபெற்றது.  இவ்விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறவின்முறை விளையாட்டுத்துறை செயலாளர் B.ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். இந்த மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் விடுதியின் முன்னாள் மாணவர் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடையே விளையாடிய போட்டியினை துவக்கி ...