Skip to main content

Posts

தேனி அருகே 2 சமுதாயங்களுக்கு சொந்தமான கோவிலை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, மே.28- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் கட்சியினர் மற்றும் 2 சமுதாய பொதுமக்கள் 27.5.2025 அன்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாயுடு சமுதாய பொதுமக்கள், மற்றும் வாணிய செட்டியார் சமுதாய பொதுமக்கள் இணைந்து கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய காளியம்மன் கோவிலை, 2 சமுதாய மக்களும் இணைந்து கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வந்த நிலையில், ஆண்டுதோறும் பொதுமக்களிடம் வரி வசூல் செய்து திருவிழா நடத்தியதுடன், கோவிலையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.  இந்த கோவிலுக்கு சொந்தமாக அன்னஞ்சி விலக்கு பகுதியிலும், ஊஞ்சாம்பட்டியிலும் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னையில் பல ஆண்டுகளாக இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் திடீரென தேனிக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் இந்த கோவில் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த கோவிலுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். மேலும் கிராம மக்களின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு ...

தேனியில் நடிகர் ரியாஸ் பிறந்தநாள் விழா: முதியோர், ஆதரவற்றோருக்கு உணவு அளித்து கொண்டாட்டம்

தேனி, மே.27- தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியை சேர்ந்த நடிகர் ரியாஸ் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 26-ம் தேதி தனது பிறந்த நாளை முதியோர், ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்கும் நாளாக கொண்டாடி வருகிறார். இதேபோன்று இந்த ஆணடு 26.5.2025 அன்று நடிகர் ரியாஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டி பகுதியில் உள்ள கௌமாரியம்மன் கோவில், கண்ணீஸ்வரமுடையார் கோவில் பகுதியில் சுற்றி திரியும் முதியவர் மற்றும் ஆதரவற்றோர்  நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கினார். அதுபோல மே 26 அன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ரியாஸ்க்கு திரைத்துறையினர், நகர முக்கிய பிரமுகர்கள், பத்திரிக்கை நிருபர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ............................... பாலகுரு, சிறப்பு நிருபர் 

தேனி மாவட்டத்தில் முதல் நாளில் நடந்த ஜமாபந்தியில் 599 மனுக்கள் வந்தது

தேனி , மே.22- தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 தாலுகாக்களில் 22.5.2025 முதல் 30.5.2025 வரை (24.5.2025, 25.5.2025 மற்றும் 26.5.2025 ஆகிய நாட்கள் நீங்கலாக) 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளான 22.5.2025 அன்று பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி பிட் 1, கெங்குவார்பட்டி பிட் 2, தேவதானப்பட்டி பிட் 1, தேவதானப்பட்டி பிட் 2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது .இந்த ஜமாபந்தி வருவாய் தீர்வாயத்தில் 172 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதேபோன்று உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பூலானந்தபுரம். கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 56 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட் 1, ஆண்டிபட்டி பிட் 2 ஆகிய கிராமங்களுக்கு ப...

தேனியில், அகில இந்திய கட்டுநர் சங்க புதிய நிர்வாக குழு பதவி ஏற்பு விழா

தேனி, மே.20- அகில இந்திய கட்டுநர் சங்கம் தேனி மையத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக குழுவினர் பதவி ஏற்பு விழா தேனி ரத்தினம் நகர் பகுதியில் பெரியகுளம் சாலையில் உள்ள கூடலிங்கேஸ்வரா மஹாலில் 19.5.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.  தேனி மைய தலைவர் பாண்டியராஜ் வரவேற்றார்.  விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் முன்னாள் மாநில தலைவர் ஜெகநாதன், தேனி மைய முன்னாள் தலைவர்கள் சர்வேஸ்வரராஜா, முத்து கோவிந்தன்(KMC), ராதாகிருஷ்ணன், சுப்பையா இளம்வழுதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவின்போது தேனி மையத்தின் புதிய தலைவராக நெளசாத், செயலாளராக வாசகன், பொருளாளராக அமிதாப்பச்சன், துணைத்தலைவராக தண்டபாணி, இணைச்செயலாளராக ஆண்டனி ஆகியோர் தலைமையிலான குழுவினருக்கு மாநில தலைவர் வெங்கடேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  இதனைத்தொடர்ந்து அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் தேனி மைய புதிய தலைவர் நெளசாத் விழா ஏற்புரை ஆற்றினார்.  தேனி மைய முன்னாள் தலைவர் பொறியாளர் R.நந்...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கருவூலக்கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, மே.17- தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கருவூலக்கணக்குதுறை அலுவலர் சங்கத்தின் தேனி மாவட்ட மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கருவூலகணக்குத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் குமார் செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சென்னமராஜ், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி ஊழியர்கள் சங்கம்.மாநில செயலாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தேனி மாவட்ட தலைவர் உடையாளி, மக்கள் நலபணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சுதர்சன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மீனா, தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு மாநில கன்வீனர் அன்பழகன், தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்க மாநில செயலாளர் தேன்மொழி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலத்தின் ஊழியர் விரோத பழிவ...

கடமலைக்குண்டு அருகே அரசரடி கிராமத்திற்கு மின்சாரம், அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, மே.17- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம், வெள்ளிமலை அருகே உள்ள அரசரடி கிராம பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், அரசரடி கிராம பகுதியில் நாங்கள் கடந்த 1953-ம் ஆண்டு முதல் 400 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த 400 குடும்பங்களுக்கும் தனித்தனியாக ரேசன் காடுகள் உள்ளது. எங்கள் கிராமத்திற்கு கடந்த 1969-ம் ஆண்டில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை எங்கள் ஊரில் உள்ள எந்த வீட்டிற்கும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அது மட்டும் இன்றி எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள் வாழ்ந்து வருகிறோம். அதுபோல போக்குவரத்திற்காக சீரான தார்ச்சாலை இல்லாமல் குண்டும் குழியுமாக சாலை உள்ளது. இந்த தார் சாலை போட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. அதை சரி செய்யாத காரணத்தால் அவசர காலத்திற்கு எங்களால் விரைவாக இன்னும் செல்ல முடியாமல் உள்ளோம் மேலும் உடல் நலம் சரியில்லாதவர்களை டோலி மூலம் எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அடிக்கடி உயிர் சேதம் ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் எங்களது வீட்டின் சுவர் இடிந்து வ...

தேனி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அன்னதானம்

  தேனி, மே.16- தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 40-வது ஆண்டு சித்திரை திருவிழா 13.5.2025 முதல் 15.5.2025 வரை 3 நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு தொழிலதிபர் கண்ணன் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் ராமசாமி, ஏ.சி.வி. மில் சந்திரசேகரன், இன்ஜினியரிங் காண்ட்ராக்டர் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் ஆர.என். குரூப் மணிவண்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.  விழாவில் தேனி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், ரியல் எஸ்டேட் சாம்சங் ஷோரூம் டெர்ரி, தொழிலதிபர்கள் பாலசங்கா குரூப் குமரேசன், சந்திரகுமார், தெய்வா ஹோட்டல் பால்பாண்டி, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சர்ச்சில், அம்பை இளங்கோ, லோகநாதன், மோகன் குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் காசிமாயன், தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன், தேனி மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவு ஆப்பிள் முருகன், தொழிலதிபர் விஷுவல் பிரபு, தொழிலதிபர் டுடே ஃபேஷன் சக்தி உள்பட நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு குத்துவிள...

தேனி-பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் திட்டப்பணிகள் முடக்கம்: கனிமொழி எம்.பி.யிடம், அளித்த கோரிக்கை மனுவிற்கு உடனடி நடவடிக்கை. முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன் நன்றி தெரிவிப்பு

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் மற்றும். நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா இறகுப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் முதியோர் நடை பயிற்சி மேடை கழிப்பறை போன்றவைகள். கடந்த 4 ஆண்டுகளாக எந்த ஒரு பயன்பாடு இன்றி அடைத்து கிடைக்கிறது. இதனைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள திட்டப்பணிகள் குறித்து திராவிட முன்னேற்றக் கழக  முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதன் எதிரொலியாக உடனடியாக உடற்பயிற்சி கூடம் மற்றும் இறகுபந்து மைதானம் சிறுவர் பூங்கா ஆகியவை. உடனடியாக திறக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கா கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை திராவிட முன்னேற்ற கழக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி...

வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேர் நிலைக்கு வந்தது: பேரூராட்சி மண்டகப்படியில் சேர்மன் கீதா சசி உள்ளிட்டோருக்கு மரியாதை

தேனி, மே.13 - தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி (இன்றுடன்) முடிவடைகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது தேர் நிலையில் இருந்து கோவில் முன்பு வரை இழுத்து வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கும் தேர் இழுத்து வரப்பட்டு கோவில் பகுதியை சுற்றி நேற்று தேர் நிலைக்கு வந்தடைந்தது. இந்நிகழ்வுக்கு முன்னதாக வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே மண்டகப்படி நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பேரூராட்சி சேர்மன் கீதா சசி, செயல் அலுவலர் கணேசன்,  பேரூராட்சி கிளார்க் வாசிமலை,  உள்ளிட்டோருக்கு மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற் பொறியாளர் மணிமாறன், வீரபாண்டி பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து மண்டகப்படி நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாத...

கூடலூர் பளியன்குடி வழியாக கண்ணகி கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் 5 லிட்டர் தண்ணீர் கேன், வரலாற்று புத்தகம் வழங்கல்

தேனி, மே.12- தமிழக கேரளா எல்லை மலை பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை பௌர்ணமி (முழு நிலவு)  விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சித்திரை முழு நிலவு விழா 12.5.2025 அன்று நடைபெற்றது.  இந்த விழாவை முன்னிட்டு மலைப்பகுதியில் உள்ள கண்ணகி கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.  இந்த விழாவைக்கான தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகம் மற்றும் கேரளா பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குமுளி மலை பாதை வழியாக நடந்தும், ஜீப் வாகனங்களில் சென்றும் அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோன்று கம்பம் ஊராட்சி ஒன்றியம், கூடலூர் லோயர்கேம்ப் அருகே உள்ள பளியன்குடி மலைப்பாதை வழியாக பக்தர்கள் அதிகாலை முதல் நடந்து சென்று மலைப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி அம்மனை தரிசனம் செய்தனர்.  இந்த பளியன்குடி மலைப்பாதை வழியாக செல்லும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் ஆலோசனையின்படி தேனி மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்...