Skip to main content

Posts

தேனியில் புதிய லயன்ஸ் கிளப் தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டம்

தேனி, ஜூலை.1 - தேனி பென்னிகுவிக் லயன்ஸ் கிளப் என்ற பெயரில் புதிய லயன்ஸ் கிளப் தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் ஏற்பாடு தேனி தெய்வா ஹோட்டலில் 30.6.2025 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் லயன்ஸ் கிளப் PMJF இன்ஜினியர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு லயன்ஸ் கிளப் செயல்பாடுகள், சேவைகள் மற்றும் உறுப்பினராக சேர்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தின் போது இந்த தேனி பென்னிகுவிக் லயன்ஸ் கிளப்பில் உறுப்பினராக தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகளை சேர்ந்த நிறுவனர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். .................................. நாகராஜ், தலைமை நிருபர்  

தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்திற்கான மணமாலை நிகழ்ச்சி

தேனி, ஜூன்.30- தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்திற்கான மணமாலை நிகழ்ச்சி வசந்த மஹாலில் 29.6.2025 அன்று நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஆர்.எஸ். ராஜசேகரன், தேனி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பேரவை முதன்மை செயலர் கோவிந்தமணி, தலைமை பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தை சேர்ந்த 8 வீடு, 16 வீட்டினை சேர்ந்த மணமகன், மணமகள் தேடுவோர் தங்களது பிள்ளைகளின் ஜாதகத்தினை பொறுப்பாளரிடம் வழங்கி தங்களுக்கான மணமகள், மணமகனை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியில் சமுதாய முக்கிய பிரமுகர்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட  சமுதாய மக்கள் கலந்து கொண்டனர். .......................... நாகராஜ், தலைமை நிருபர் 

தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரப்புகள் அகற்றா விட்டால் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் நூதன போராட்டம் நடத்த முடிவு: மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தகவல்

தேனி, ஜூன்.26- தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றா விட்டால்  இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் சாலையில் ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை நடத்தும் நூதன போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தெரிவித்துள்ளார்.    இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனியில் இருந்து கம்பம் செல்லும் சாலையில், போடி விலக்கு வரை சாலையின் இருபுறம் சமீபகாலமாக கடைகள் புற்றீசல் போல உருவாகி வருகிறது.  மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் சாலையில் சென்று வருவதற்கு இடையூறாக இருப்பதுடன் அந்த சாலையில் சென்று வரும் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக இந்த சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் சாலையில் ஆடு, கோழிகளை சாலையில் பலியிட்டு பூஜை செய்யும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு  குரு அய்யப்பன் அந்த...

தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள்: மாநில தலைவர் திண்டுக்கல் நடராஜன் வழங்கினார்

தேனி, ஜூன்.22- தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கம் மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் பொது நல சேவை மையம் சார்பில் கல்வி பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி டி.சி.ஏ மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சேதுபதி, மாநில பொருளாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்றார்.  விழாவில் மாநில தலைவர், முன்னாள் சேர்மன் திண்டுக்கல் நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு மற்றும் பெண்கள் ஆண்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவின்போது எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் படித்து முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற 12 மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசுத்தொகை வழங்கப்பட்டது. விழாவில் மாநில துணைத்தலைவ...

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி தாலுகா பகுதியி்ல் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு

  தேனி, ஜூன்.19- தேனி மாவட்டம், தேனி தாலுகா பகுதியில் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்,  தேனி வட்டாட்சியர் அலுவலகம்,  உழவர் சந்தை,  ஆரம்ப சுகாதார நிலையம், ஒழுங்குமுறை விற்பனை கூடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கள்ளர்  நடுநிலைப்பள்ளி மற்றும் இதர பணிகளின் செயல்பாடுகள் குறித்து    மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், 18.6.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் அனைத்து                                      நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்றும்,  மக்களை நாடி, மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அரசு இயந்திரம் முழுவதுமாக களத்திற்கே வந்து செயல்படும் உங்களைத்தேடி, உங்கள் ஊரில்  என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதன்படி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாதந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தே...

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 851 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13.49 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தேனி, ஜூன்.17- தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 16.6.2025 அன்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம். புதுமைப் பெண், தமிழ் புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ...

தேனியில் தனிஷ்க் நிறுவனம் அறிமுகப்படுத்தும் பழைய தங்கத்திற்கு 2 காரட் கூடுதல் மதிப்பு பெறும் மாபெரும் தங்க பரிமாற்ற திட்டம் : ஜூன் 30 வரை நடக்கிறது

தேனி, ஜூன்.16- தேனியில் உள்ள தனிஷ்க் தங்க நகை ஷோரூம் கிளையின் நிர்வாக இயக்குனர்கள் ரமண மூர்த்தி, கதிரேசன் மற்றும் மேலாளர் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அடுத்து, டாடா குழுமத்தை சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கப் பரிமாற்ற சலுகையை [Gold Exchange offer] அறிவித்துள்ளது.  இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்யும் போது 2 காரட் வரை கூடுதல் மதிப்பு" (up to 2 Karat extra valur) பெறும் வாய்ப்பை வழங்குகிறது. இச் சலுகை ஜூன் 30.2025 வரை மட்டுமே வழங்கப்படும் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை, வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளை பெறும் வாய்ப்பளிக்கிறது: தங்க நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 1 காரட் கூடுதலாக பெறுங்கள். [1KT extra on old gold வைர நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 2 காரட் கூடுதலாக பெறுங்கள். (2KT extra on old gold] உதாரணத்திற்கு, நீங்கள் தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட...

தேனி அருகே, கலாம் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா: தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., திறந்து வைத்தார்

தேனி, ஜூன்.15- கோவை மாவட்டத்தில் கலாம் அய்யா அவர்களின் பெயரில் 6 கிளைகளை துவங்கி தனது கடினமான உழைப்பால் உண்மை நேர்மை என்ற தாரக மந்திரத்தின் மூலம்  வெற்றிகரமாக நடத்தி வரும் 25 வயதான இளம் தொழில் அதிபர்  நித்தீஸ் என்பவர் தற்போது தேனி மாவட்டம், போடி ரோடு, கோடாங்கிபட்டியில் கலாம் பர்னிச்சர் ஷோரூம்  7-வது கிளையினை தொடங்கி உள்ளார். இந்த பர்னிச்சர் கிளையின் திறப்பு விழா 15.6.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பர்னிச்சர் ஷோரூம் உரிமையாளர் நித்தீஸ் வரவேற்றார். விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெடடி பர்னிச்சர் ஷோரூமை திறந்து வைத்தார்.  இதனைத்தொடர்ந்து பர்னிச்சர் ஷோரூம் வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பர்னிச்சர் விற்பனையையும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தொழில் அதிபர் கோவை JRD என்ற ஜே. ராஜேந்திரன், ரீபோஸ் மேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலமுரளி, முன்னாள் எம்.எல்.ஏ., போடி லட்சுமணன், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட துணைச்செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருக்கண்ணன், ...