மதுரை, மார்ச்.1-
மதுரை மாவட்டம், சோழவந்தான் நகரில் உள்ள சின்னகடை வீதியில் உள்ள கலையரங்கத்தில் அ.ம.மு.க புறநகர் மாவட்ட கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது,
கூட்டத்திற்கு வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வி.ராஜன், பேரூர் செயலாளர் முள்ளை ஆர்.மதன் ஆகியோர் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் மேலூர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
இளைஞர் அணி வக்கீல் வீரமாரி பாண்டியன், டிரஸ்ட் பாலு, அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோடிஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், அம்மா பேரவை முரளி சோழகர் வரவேற்றனர்.
அ.ம.மு.க புறநகர் மாவட்ட செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கதிர்காமு, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் , ரயில்வே பரமநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் பேசியவர்கள் தீயசக்தி தி.மு.க-வை வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் துரத்தி விரட்ட வேண்டும் என்றனர். அம்மாவின் உண்மை விசுவாசிகளும்,பிரிந்து செயல்படும் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தி.மு.க-வை தோற்கடிக்க வேண்டும் என்றார்கள்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் மில்கேட் ராஜேந்திரன், ஆனந்தன், மாவட்ட கழக நிர்வாகிகள் சுமதி, இளஞ்செழியன், மாவட்ட அணியினர், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய துணை செயலாளர் சின்னமருது, ராமகிருஷ்ணன், பூக்கடை ரபீக் ராஜா, மல்லிகா, மாரியப்பன், அசோக், ஆனந்த், நாகராஜ், ரவி, பன்னீர்செல்வம், முள்ளை சக்தி, ரஜினி பிரபு, டாக்டர் முருகேசன், அ.ம.மு.க கட்சி நிர்வாகிகள், அலங்காநல்லூர் ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள், மேலூர் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் செயலாளர் திரவியம் நன்றியுரை கூறினார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments