தேனியில் மோட்டோ கார் ஜோன் திறப்பு விழாவில் நலத்திட்ட உதவிகள்: தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி., வழங்கினார்
தேனி, ஜன. 5-
தேனி மாவட்டம், தேனி-கம்பம் சாலையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள நிப்பான் பர்னிச்சர் அருகே மோட்டோ கார் ஜோன் சிறப்பு விழா 5.1.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வி.ஆர்.ராஜன் தலைமை தாங்கினார். கார் ஜோன் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் வரவேற்றார். தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வெட்டி கார் ஜோன் நிறுவனத்தை திறந்து வைத்தார்.
விழாவில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் MKM முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் P.செல்வகுமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடர்கள் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன், தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
விழா நிகழ்வுகளை தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர், சமூக ஆர்வலர் நாணயம் சிதம்பரம் தொகுத்து வழங்கினார். விழாவின் போது ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, சேலை போன்ற நலத்திட்ட உதவிகளை தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., வழங்கினார். விழாவில் தொழிலதிபர்கள், நகர முக்கிய பிரமுகர்கள், அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
.....................
Comments