தேனி, அக்.4-
தேனி KRR நகரில் உள்ள மாவட்ட வன சரக அலுவலகத்தில் தேனி வாசவி கிளப், வாசவி கிளப் வனிதா சார்பில் 5000 விதை பந்துகள் மாவட்ட வன அலுவலர் சமர்த்தாவிடம் வழங்கும் நிகழ்ச்சி 3.10.2024 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தேனி வாசவி கிளப் தலைவர் பால கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் இந்திரஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விதை பந்துகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான திட்ட இயக்குனர் ஸ்ரீ வித்யா பாலாஜி, மாவட்ட வன அலுவலர் சமர்த்தாவிடம் 5 ஆயிரம் விதை பந்துகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ரேஞ்சர் சாந்தகுமார் மற்றும் வாசவி கிளப் உறுப்பினர் பால நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments