Skip to main content

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் : ராயப்பன்பட்டி ஊராட்சியில் கலெக்டர் பார்வையாளராக பங்கேற்பு

தேனி, செப்.2-

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் 2.10.2024 அன்று நடைபெற்றது.

இதில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம், ராயப்பன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா பார்வையாளராக கலந்து கொண்டார். 

அதுபோல தேனி ஊராட்சி ஒன்றியம், அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மோனிகா, ஊராட்சி செயலாளர் பாண்டி உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோன்று கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானமணி பரமசிவம் தலைமையில் நடைபெற்றது ஊராட்சி செயலாளர் சுருளி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 
ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.. ஊராட்சி செயலாளர் ரகுநாத் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. 

தர்மாபுரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.. 

கோட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் மாலா, ஊராட்சி செயலாளர் ராமு உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரியா, ஊராட்சி செயலாளர் மணிகண்டன் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments