தேனி, செப்.14-
தேசிய மக்கள் நீதிமன்ற முகாமினை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் லோக் அதாலத் முகாம் 14.9.2024 அன்று நடைபெற்றது.
இதில் தேனி மாவட்ட கோர்ட்டில் நடந்த முகாமிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமை தாங்கினார்.
தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் நீதிபதி கவிதா தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார்.
முகாமில் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், அமர்வு நீதிபதி கணேசன் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் (விரைவு) ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று பெரியகுளம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சமீனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் சுந்தரராஜன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
உத்தமபாளையம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் ராஜேஷ்குமார், ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் ராஜ்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
அதுபோல ஆண்டிபட்டி கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கபாலீஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
போடிநாயக்கனூர் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி சையது சுலைமான் உசேன் மற்றும் நீதித்துறை நடுவர் (விரைவு) ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் கணேசன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
தேனி, உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1689 வழக்குகளில் ரூ.17,80,29,846-க்கு தீர்வு காணப்பட்டது.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments