தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலை-மயிலை, சின்னமனூர், போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உதவி பொறியாளர்களாக பணியாற்றக்கூடிய 16 ஒன்றிய பொறியாளர்களை இடமாற்றம் செய்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் விட்டு ஒன்றிய அலுவலகம் மாற்றப்பட்டுள்ள விபரம் வருமாறு:-
ஆண்டிபட்டி உமாமகேஸ்வரி சின்னமனூருக்கும், சின்னமனூரில் பணியாற்றிய கார்த்திக் க.மயிலாடும்பாறைக்கும், க.மயிலாடும்பாறையில் பணியாற்றிய ராமமூர்த்தி ஆண்டிபட்டிக்கும், ஆண்டிபட்டியில் பணியாற்றிய பிரகதீஸ்வரன் தேனிக்கும்.
தேனியில் பணியாற்றிய அஜய்குமார் பெரியகுளத்திற்கும், பெரியகுளத்தில் பணியாற்றிய சுபா தேனிக்கும், தேனியில் பணியாற்றிய சோனா போடிக்கும், போடியில் பணியாற்றிய சுஜாதா உத்தமபாளையத்திற்கும், உத்தமபாளையத்தில் பணியாற்றிய ரஞ்சிதா ஆண்டிபட்டிக்கும், போடியில் பணியாற்றிய மகேந்திரன் பெரியகுளத்திற்கும், பெரியகுளத்தில் பணியாற்றிய சேகர் உத்தமபாளையத்திற்கும்,
உத்தமபளையத்தில் பணியாற்றிய தெய்வலட்சுமி கம்பத்திற்கும், கம்பத்தில் பணியாற்றிய பாண்டிசெல்வி உத்தமபாளையத்திற்கும், உத்தமபாளையத்தில் பணியாற்றிய விவேகானந்தன் போடிக்கும், க.மயிலாடும் பாறையில் பணியாற்றிய நாகராஜன் ஆண்டிபட்டிக்கும், ஆண்டிபட்டியில் பணியாற்றிய முத்துக்கனி க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
சசிதுரை, சிறப்பு நிருபர்
Comments