Skip to main content

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் மின்சார வாகனம் குறித்து கருத்தரங்கு

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மற்றும் எலக்ட்ரோபிலிட்ஸ் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் மின்சார வாகனம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர்கள் A.ராஜ்குமார். A.S.R.மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இணைச்செயலாளர் S.நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் C.மதளைசுந்தரம் அவர்கள் இக்கருத்தரங்கத்தின் முக்கியத்துவம், மின்சார வாகனங்களின் தொழில்நுட்பம் மற்றும் அதனுடைய வேலைவாய்ப்பு பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் இறுதியாண்டு மாணவி V.அம்பிகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கருத்தரங்கில் தேனி வைக் பைக் இந்தியா லிமிடெட் நிறுவன செயல் தலைவர் N.கோபி சங்கர் மற்றும் தரக்கட்டுபாடு மேலாளர் N.ஞானகார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்சார வாகனங்களின் பயன்பாடு, மின்சார வாகனங்களுக்கு அரசு வழங்கும் நிதியுதவி சலுகைகள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை பற்றியும், மின்சார வாகனங்களின் பாகங்களான பேனல் கன்ட்ரோலர், சென்சார், சர்க்கியூட் போர்டு பிஎல்டிசி மோட்டார் ஆகியவற்றின் தொழில்நுட்பம். மின்சார வாகனங்களில் லித்தியம் பேட்டரி. லித்தியம் அயன் பேட்டரிகளின் பயன்பாடு, சார்ஜிங் ஸ்டேசனை எவ்வாறு மேம்படுத்துவது. மின்சார வாகனங்களில் விபத்துகள் ஏற்பாடாமல் இருக்கக்கூடிய தொழில்நுட்பம். மின்சார வாகனங்களில் சரக்கு வாகனங்களின் தொழில்நுட்பம் ஆகியவற்றை பற்றி மாணவர்களிடையே எடுத்துரைத்தனர். மேலும் பொறியியல் மாணவர்கள் மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டுமென்று சிறப்புரையாற்றினார். கருத்தரங்கத்தில் மின்சார வாகனங்களின் செயல்பாடுகள், பேட்டரிகளின் வெப்பநிலை, மழை காலங்கள், மற்றும் நீர்நிலைகளில் மின்சார வாகனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தொழில்நுட்ப தீர்வு ஆகியவற்றை பற்றி மாணவர்களிடையே கலந்துரையாடி செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 

இந்த கருத்தரங்கில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன், ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் N.மாதவன், டாக்டர்.M.சத்யா. வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர்.C.கார்த்திகேயன். எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் தலைவர் டாக்டர்.M.பாண்டி மகாராஜன் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் மூன்றாமாண்டு மாணவி N.விஷ்னுபிரியா நன்றியுரை வழங்கினார்.

சீனிவாசன், உதவி ஆசிரியர்

ராதாகிருஷ்ணன், நிருபர் 

Comments