தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா 5.9.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் T. ராஜமோகன் தலைமை தாங்கினார்.உறவின்முறை உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M. ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லூரி செயலாளர் A. குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி பொருளறிவியல் துறை பேராசிரியர் M.ஜீவிதா சிறப்பு விருந்தினர் அவர்களை அறிமுகம் செய்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி கலந்து கொண்டு ஆசிரியர் தினவிழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் ஆசிரியர் தின விழா உரையில், அலுவலராக இருந்து சொல்வதை காட்டிலும் ஆசிரியராக இருந்து சொல்வதில் பெருமையடைகிறேன் என்றும், ஆசிரியருக்கு என்று தனி இலக்கணம் இருக்கிறது. ஆசு+இரியர் ஆசிரியம், அதாவது ஆசு என்றால் குற்றங்களை களைபவர், ஆசிரியர் என்பவர் குற்றங்களை களைபவர் என்பது பொருள் என்றும், ஆசிரியருக்கென்று ஒரு சில வரைமுறைகள் இருக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர்கள் குழந்தைகளை வளர்த்து கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை நல்முறையில் உருவாக்குபவர்கள் ஒரு சிறந்த ஆசிரியர். ஆசிரியர் எல்லா குழந்தைகளையும் அன்பு, அரவணைப்போடு நேசித்து தன் குழந்தைகளை போல் பாவிக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் அனைவரும் வருங்கால சிற்பிகள், ஆசிரியர்கள் ஒரு நல்ல சமுதாயத்தினை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் J. பியூலா ராஜினி ஏற்புரை வழங்கினார்.
விழாவில் கல்லூரி இணைச்செயலாளர் A.மணிமாறன், நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.S. சித்ரா, நாடார் சரசுவதி தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் G.காஞ்சனா, நாடார் சரசுவதி நர்சரி & பிரைமரி பள்ளி முதல்வர் V கார்த்திகா, நாடார் சரசுவதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் R. வசந்தா அசோக், உதவி தலைமை ஆசிரியர் R.வளர்மதி மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் பெரியோர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர். முடிவில் கல்லூரி பொருளறிவியல் துறை பேராசிரியர் S. யோக அஞ்சுஸ்ரீ நன்றி கூறினார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments