Skip to main content

வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் : 60 ஆயிரம் மதிப்பீட்டிலான சீர்வரிசைகளை தேனி கலெக்டர் வழங்கினார்

தேனி மாவட்டம், வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டிலான சீர்வரிசை பொருட்களை தேனி கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய பொதுமக்களின் இணைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 கிராம் திருமாங்கல்யம் உட்பட ரூ.60,000- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். 

அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இன்று 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்திற்கு தேவையான 4 கிராம் திருமாங்கல்யத்திற்கு ரூ.30,000- மணமகன் ஆடைக்கு ரூ.1,000- மணமகள் ஆடைக்கு ரூ.2,000. திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2,000- மாலை, புஷ்பம் ரூ.1,000- பீரோ ரூ.7,800- கட்டில் ரூ.7,500- மெத்தை ரூ.2,200- இரண்டு தலையணை ரூ.190- ஒரு பாய் ரூ.180- இரண்டு கைக்கடிகாரம் ரூ.1,000- ஒரு மிக்சி ரூ.1,490- பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3,640- என மொத்தம் ரூ.60,000- மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை மாவட்ட கலெக்டர் அவர்கள் திருமண ஜோடிகளுக்கு  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, துணைத்தலைவர் சாந்தகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரத்தினசபாபதி, வீரபாண்டி பேரூர் தி.மு.க செயலாளர் செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன், கௌமாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர்கள் மாரிமுத்து, நாகராஜன், கோவில் மேலாளர் பாலு, கணக்கர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர்

சரவணன், சிறப்பு நிருபர் 

Comments